தஞ்சாவூர், ஏப்.17- உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் கோவி லில், ஆண்டுதோறும் சித்திரை பெரு விழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு விழாவிற்காக, தஞ்சாவூர் பெரியகோவிலில் ஸ்ரீ சந்திர சேகரர் பஞ்சமூர்த்திகளுடன் கோவி லுக்குள்ள புறப்பாடாகி திங்கள்கிழமை காலை கொடியேற்றப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை அரண் மனை தேஸ்வதான பரம்பரை அறங்காவ லர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாத வன், கண்காணிப்பாளர் பாலசுப்பரமணி யன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.