பெரம்பலூர், செப்.24 - சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பணியா ளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட நெடுஞ் சாலைத்துறை உதவிகோட்ட பொறி யாளர்கள் அலுவலகம் எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் உட்கோட்ட துணைத் தலைவர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். கோட்ட துணைத் தலைவர் கே. மணிவேல் முன்னிலை வகித்தார். கோட்டச் செயலர் சி. சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில நெடுஞ்சாலை ஆணை யம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எஸ்.மகேந்திரன், கோட்டத் தலைவர் பி.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குன்னம் உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் எதிரே, உட்கோட்டத் தலைவர் எஸ்.குணசேக ரன் தலைமையிலும், வேப்பந்தட்டை உதவி கோட்டப் பொறியாளர் அலு வலகம் எதிரே உட்கோட்டத் தலைவர் டி.பழநிசாமி தலைமையிலும் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணி யாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் துறையூர் உட்கோட்டம் சார்பில் துறை யூர் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் எதிரே சாலை பணியா ளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் நிறைவுரையாற்றினார். உள்கோட்ட பொருளாளர் கருப்பண்ணன் நன்றி கூறினார். இதே போன்று திருச்சி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத் தலை வர் தேவானந்தம் தலைமை வகித்தார். கரூர் கரூர் மாவட்டத்தில் சாலைப் பணியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் உட்கோட்ட பொருளாளர் ரா.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.சிவகுமார், மாவட்டச் செயலாளர் லோ.பாலசுப்ர மணி ஆகியோர் உரையாற்றினர்.