தஞ்சாவூர், ஏப்.21-
நிகழ்கோடை மற்றும் முன்பட்ட குறுவை பரு வத்துக்கு ஏற்ற குறுகிய கால ஏடிடீ 53 நெல் ரகத்தை சாகு படி செய்து அதிக மகசூல் பெற்றிட தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தஞ்சாவூர் மாவட் டத்தில் நிகழ் கோடை பரு வத்தில் ஏறத்தாழ 40 ஆயி ரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்திட விவசாயிகள் தற் போது நாற்றங்கால் தயா ரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆடு துறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் 2019 ஆம் ஆண்டு குறுவை மற்றும் கோடை பருவங் களுக்கு ஏற்ற குறுகிய கால ஏடிடீ 53 நெல் ரகத்தை வெளி யிட்டது.
குறுவை சாகுபடிக்கு ஏற்ற ரகமான ஏடிடீ 53 நெல் ரகம் 110 -115 நாட்கள் வயது டையது. இந்த ரகம் குறுகிய கால உயர் விளைச்சல் கொண்ட சன்ன ரகம், அடர்ந்த கதிர்களுடனும் தண்டுத்துளைப்பான், இலைமடக்குப் புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
மேலும் ஹெக்டேருக்கு 6,334 கிலோ சராசரி மகசூல் தரவல்லது. இது ஏ.டி.டீ 43- யைக் காட்டிலும் 9.4 விழுக் காடும் கோ 51-ஐ விட 14 விழுக்காடும் அதிக மகசூல் கொடுக்கக் கூடியது
அதிக மகசூல் திறனும், பூச்சி மற்றும் நோய்த் தாக்கும் திறனும், சாயாத் தன்மையும், சிறந்த சமை யல் பண்புகளையும் கொண் டுள்ளதால் ஏ.டி.டீ. 53 நிகழ் பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய ஏற்றது’’ எனத் தெரிவித்துள்ளார்.