தஞ்சாவூர், ஆக.9-
வீட்டின் வழியாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயியை மின்துறை அதி காரிகள், காவல்துறையினர் மிரட்டுவதாக கூறப்படு கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், சீகன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்ல துரை (60). இவர் கூட்டுக் குடும்பமாக வசித்து வரு கிறார். இவருக்கு சொந்த மாக 23 செண்டு இடம் உள் ளது. இவரது வீட்டு வழி யாக, இவருடைய அனுமதி யின்றி ஏற்கனவே இரண்டு மின்கம்பங்களை மின் வாரி யத்தினர் நட்டு அந்த வழியாக மின் இணைப்பு கொடுத்துள் ளனர்.
இந்நிலையில், அருகில் உள்ள ஒரு தனிநபருக்கு சொந்தமான தென்னந்தோப் பிற்கு மின் இணைப்பு கொடுப் பதற்காக, இவரது வீட்டின் குறுக்கே உயர் அழுத்த மின் கம்பியை கொண்டு சென் றுள்ளனர். தான் வீடு கட்டப் போவதாகவும், உயர் அழுத்த மின்கம்பம் வீட்டின் குறுக்கே சென்றால் ஏதா வது அசம்பாவிதம் நிகழும் என்று விவசாயி செல்லதுரை தெரிவித்துள்ளார். ஆனால், தன்னை மின்வாரிய பெரு மகளூர் பகுதி அதிகாரிகள், பேராவூரணி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ஆகியோர் அடிக்கடி மிரட்டி வருவதாக கூறுகிறார் செல்ல துரை. மின் வயரை வேறு வழி யாக கொண்டு செல்லாமல், வேண்டுமென்றே என் வீட் டின் குறுக்கே கொண்டு செல் கின்றனர்.
இதனால், எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. மின்சாரத் துறையும் காவல் துறையினரும் என்னை தொடர்ந்து அச்சுறுத்தி வரு கின்றனர். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி எனக்கு உரிய நியா யம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள் ளார்.