கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் முன்பக்க சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 2 வருடங்களுக்கு மேலாகிறது. இந்த மைதானத்தை இரவு நேரங்களில், குடிகாரர்களின் பாராக பயன்படுத்தி, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மைதானத்தின் முன்பக்க சுவரை முழுமையாக இடித்து விட்டு, உயரமான சுவர் எழுப்பி கேட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.