தஞ்சாவூர், மே 3- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீதிமன்றத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்ய சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதி சுரேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பேராவூரணியில் மாவட்ட உரிமை யியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்துறைக்கு சொந்தமான கட்டி டத்தில் இயங்கி வருகிறது. நீதிமன்றத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுரேஷ்குமார் வட்டாட் சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காலி யிடம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக் கொல்லை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள இடங்களை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மணி, மாவட்ட உரிமை யியல் நீதிபதி ரவிச்சந்திரன், மாவட்ட உரிமை யியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அழகேசன், வட்டாட்சியர் தெய்வானை, பார் கவுன்சில் செயலாளர் சிவேதி நடராஜன், தலைவர் எஸ்.வி.சீனிவாசன் மற்றும் வரு வாய்த்துறையினர் உடனிருந்தனர்.