“இந்திய இடதுசாரி இயக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தவர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங் கேற்று தாய்நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம்அனு பவித்த மாபெரும் தலைவர் என். சங்க ரய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) உதயமான போது மிக முக்கியமான தலைவராக இருந்து செயல்பட்டவர். இந்திய நாடு முழுவதும் விவசாயிக ளை அணிதிரட்டுவதற்காக அயராது பாடுபட்டவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராக வும், அகில இந்திய தலைவராகவும் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றியவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பொறுப்பேற்று தமிழ் நாட்டில் தமிழக விவசாயிகளை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தியவர். தன் வாழ்நாள் முழுவதும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர பகுதி விவசாயிகள், பழங்குடி (மலைவாழ் மக்கள்) பொது மக்கள் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களில் களம் கண்ட தலைவர் மரியாதைக்குரிய தலைவரான தோழர் என். சங்கரய்யா, 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு விவசாயப் பழங்குடி (மலைவாழ் மக்கள்) பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த வர். வயது மூப்பின் காரணமாக இன்று மறைந்த என்.எஸ். அவர்களுக்கு தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் நெஞ்சார்ந்த அஞ்ச லியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் கொடிகள் மூன்று நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்”
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.டில்லிபாபு, பொதுச்செயலாளர்
இரா.சரவணன் அறிக்கை