கைவினைக் கலைஞரைத் தவிக்க விடும் திருவாரூர் நகராட்சி
திருவாரூர், ஏப்.24- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் வசிக்கும் பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்தவரின் வீட்டை நகராட்சி நிர்வாகம் இடித்துத் தள்ளி அவரைத் தவி யாய் தவிக்கவிட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 10-ஆவது வார்டில் திருக்குளம் வடகரையில் 39 ஆண்டுகளாக கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார் கோவிந்த ராஜ்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் திருக் குளத்தை சீர்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அப்போது பட்டி யல் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவரது வீட்டை இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளியுள்ளது. இடித்த வீட்டிற்குப் பதிலாக திருத்துறைப் பூண்டி கீழ சிங்களாந்தியில் இடம் வழங்குவதோடு மின் இணைப்பும் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர். ஆனால் வாக்குறுதி யை அதிகாரிகள் நிறைவேற்ற முன்வர வில்லை.
இதுகுறித்து அவர் நமது செய்தியா ளரிடம் கூறியதாவது:-
“நான் ஆதிதிராவிடர் சாதியைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் எனது வீட்டை மட்டும் இடித்து விட்டனர். இதற்குப் பதிலாக கீழ சிங்களாந்தியில் ஒரு இடத்தைக் கொடுத்து பட்டா மற்றும் மின்சார இணைப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் இது நாள் வரை எதுவும் செய்யவில்லை.
குடும்ப அட்டை, மின் வசதி, குடிநீர் உள்ளிட்ட அரசின் அனைத்து உதவி களையும் பெற்று 39 வருடங்களாக வாழ்ந்து வந்த வீட்டை திடீரென இடித்து விட்டதால் எனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பல முறை மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், ஆளுநர், தலைமைச் செயலாளர் என அனை வரிடமும் மனு அளித்துள்ளேன். வழக்க றிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள் ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
நான் கைவினைக் கலைஞன் எனது தொழிலுக்கு ஏதுவாக திருத்துறைப் பூண்டி நகராட்சி பகுதியிலேயே இடம் வழங்கினால் எனது வாழ்வாதாரம் மேம் படும். எனது கோரிக்கை நிறைவேறாத தால் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் குடியுரிமைக்கான அனைத்து சான்றி தழ்களும் ஒப்படைப்பதற்காக வந்துள் ளேன்” என்றார்.
தொடர்ந்து இது தொடர்பான மனு ஒன்றையும் ஆட்சியரிடம் அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.