districts

திருச்சி முக்கிய செய்திகள்

தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர், டிச.23 -  தஞ்சாவூர் மாவட்டம்  குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்  கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2023-2024 ஆம் கல்வி யாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாண விகளுக்கான பருவத் தேர்வு (நவம்பர் 2023)  முடிவுகளை தேர்வு நெறி யாளர் தெ.மலர்விழி வழங்கினார். இதைத்  தொடர்ந்து, வெள்ளிக் கிழமை கல்லூரி முதல்வர்  முனைவர் அ.ஜான் பீட்டர், துறைத் தலை வர்கள் முன்னிலையில் முடிவுகளை வெளியிட் டார். இதன் விவரம் www. kngac.ac.in என்ற  கல்லூரி இணையதளத் தில் வெளியிடப்பட்டு உள்ளது என குந்தவை நாச்சியார் அரசு மகளிர்  கலை கல்லூரி (தன் னாட்சி) முதல்வர் தெரி வித்துள்ளார். 

திட்டமிடல் கூட்டம்

அறந்தாங்கி, டிச.23 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார வளமையத்தில் எண்ணும் எழுத்தும்  மூன்றாம் பருவத்திற் கான 1, 2 மற்றும் 3 ஆம் வகுப்பு முன் திட்டமிடல், கற்றல்-கற்பித்தல் உப கரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் நடை பெற்றது. தமிழ், ஆங்கி லம் மற்றும் கணிதம் பாடத் திற்கு மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் முன் னிலை வகித்தார்.

முப்பெரும் விழா

பாபநாசம், டிச.23 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா, தேசிய நூலக வார விழா,  புத்தாண்டை வரவேற் கும் விழா ஆகிய முப்பெ ரும் விழாக்கள் நடந்தன.  அய்யம்பேட்டையில் நடந்த விழாவிற்கு தலை வர் கேசவன் தலைமை வகித்தார். முன்னாள் வட் டாரத் தலைவர் தமிழ்ச் செல்வன் வரவேற்றார். 5  ஆசிரியர்களுக்கு கல்விச்  சுடர் விருது வழங்கி வடி வழகன் சிறப்புரையாற்றி னார்.  தேசிய நூலக வார  விழாவையொட்டி நடந்த  பேச்சு, கட்டுரை, ஓவியப்  போட்டிகளில் வெற்றிப்  பெற்ற 14 பள்ளிகளைச்  சேர்ந்த 87 மாணவர் களுக்கு மண்டலத் தலை வர் ரபீக், வட்டாரத் தலை வர் அன்பழகன் பரிசளித் துப் பேசினர். புத்தாண்டை  வரவேற்று லயன்ஸ் மாவட்ட அவை இணைச்  செயலர் அனந்த கிருஷ்ணா  பேசினார். 

கணித நாள் விழா

கும்பகோணம், டிச.23- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன் னாட்சி)யில் கணிதத் துறை சார்பாக கணித மேதை சீனிவாச ராமானு ஜன் பிறந்த நாள் மற்றும் தேசிய கணித நாள் விழா  வெள்ளியன்று நடை பெற்றது.  கல்லூரி முதல் வர் அ.மாதவி தலைமை வகித்தார். வேதியல் துறை தலைவர் மா.மீனாட் சிசுந்தரம், தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் இரா. சுந்தர்ராஜன் சிறப்புரை யாற்றினர். கணிதத்துறை பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி  முதல்வர் பரிசளித்து பாராட்டினார்.

அறிவியல் இயக்கத்தின்  மன்னார்குடி ஒன்றிய மாநாடு

மன்னார்குடி, டிச.23- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றிய மாநாடு மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் முனைவர் எஸ்.அன்பரசு தலைமை வகித்தார். பொருளளாளர் கே.வீ.பாஸ்கரன்  வரவேற்றார். முன்னதாக ஆசிரியர் ப.எழிலரசி அறிவியல் பாடல் பாடினார். மாநாட்டை மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி தொடங்கி வைத்தார்.  ‘சமூக மாற்றத்திற்கான அறிவியல்’ என்ற தலைப்பில் மாநில துணைத்தலைவர் வ.சேதுராமன் கருத்துரை ஆற்றி னார். தலைவராக முனைவர் எஸ்.அன்பரசு, செயலாளராக கா.விஜயன், பொருளாளராக கே.வீ.பாஸ்கரன் உட்பட 11 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்டத் துணைத்தலைவர் ப.தண்டபாணி, இணைச் செயலாளர் எஸ்.அருள், ரோட்டரி எஸ்.சாந்தகுமார் ஆகியோர் பேசினர்.  ஆசிரியர் எஸ்.சுபாகர் நன்றி கூறினார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு:  2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர், டிச.23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். பாப்பாக்குடி, காமராஜர் காலனியைச் சேர்ந்த பாலகுமார் (26) என்பவர் பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாக, 28.11.2023 அன்று கைது செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதேபோல், மாற்றுத்திறனாளி பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குருவாலப்பர் கோயில் தெற்கு தெருவைச் சேர்ந்த விஜய் (29) என்பவர் 26.11.2023 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட  ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளிக்கிழமை உத்தர விட்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில்  அடைக்கப்பட்டனர்.

தெருமுனைப் பிரச்சாரம்

கரூர், டிச.23 - மக்கள், தொழிலாளர் கள், விவசாயிகள் விரோத  மோடி அரசின் கொள்கை களை கண்டித்து அனைத்து  ஒன்றிய, மாநில தொழிற் சங்கங்கள், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் தோகை மலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற கூட்டத் திற்கு தொ.மு.ச. பேரவை மாவட்டத் தலைவர் வி.ஆர். அண்ணாவேலு தலைமை வகித்தார். தொ.மு.ச. பேரவை மாவட்டச் செயலா ளர் பழ.அப்பாசாமி, சிஐடியு  மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செய லாளர் கே.சக்திவேல், ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர்  ஜி.பி.எஸ்.வடிவேலன் ஆகி யோர் பேசினர்.

12 ஐம்பொன் சிலைகளை  திருட முயன்ற இளைஞர் கைது

தஞ்சாவூர், டிச.23 - 12 ஐம்பொன் சிலை களை திருட முயன்ற இளை ஞரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்த 25 கிராம் நகை களை மீட்டனர். தஞ்சாவூர் பூக்குளம்  பகுதியில், சத்திரம் நிர்வா கத்தின் கட்டுப்பாட்டில், 400 ஆண்டுகள் பழமையான வேதவள்ளி சமேத நாக நாதர் கோவில் உள்ளது. இங்கு தினேஷ் என்பவர் அர்ச்சகராக உள்ளார். இந்நிலையில், கடந்த டிச.17 அன்று கோவிலை தினேஷ் திறந்த போது, ஐம்பொன் சிலைகள் வைக் கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டு, 12 சிலைகள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து தினேஷ், மேற்கு காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். காவல்துறை யினர் ஆய்வில், கோவி லின் பின்பகுதியில் உள்ள  குளத்தின் கரையில், சாமி  சிலைகள் சாக்குமூட்டையில் கட்டி கிடந்தது தெரிய வந்தது.   இதையடுத்து காவல் துறையினர், தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த ஆனந்த் (27) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து  விசாரணை நடத்தினர். விசா ரணையில், அதிகாலை நேரத்தில் கோவிலில் இருந்த  சிலைகள் மற்றும் சாமி களுக்கு அணிவிக்கப்பட்டி ருந்த 9 கிராம் தங்க மற்றும் 16 கிராம் வெள்ளி நகைகளை திருடியுள்ளார். பின்னர், திருடிய பொருட்களை எடுத்து வரும் போது, ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சாமி சிலைகளை யாருக் கும் தெரியாமல் இருக்க குளத்தின் கரையில் வைத்து விட்டு இரவில் வந்து எடுத்து  கொள்ள திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந் திடம் இருந்து நகைகளை மீட்டு, அவரை கைது செய்த னர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை தேடும் பணி தீவிரம்

கும்பகோணம், டிச.23 - கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் வாண்டையார் இருப்பு பகுதியில் தியாக ராஜன் என்பவர் வயது முதிர்வு காரணமாக இறந்தார். இந்த  துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அவருடைய உறவி னர்கள் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள அன்னக்காரன் பேட்டையில் இருந்து,  ஒரு குழுவாக வேனில் வாண்டையார் இருப்புக்கு வந்த னர். அப்போது ஆற்றில் இறங்கி குறுக்கே செல்லலாம் என  நினைத்து ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆற்றில் நீர்வரத்து  அதிகமாக இருந்ததால் குலோத்துங்கன் (55), இளங்கோவன்  (60) ஆகிய இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். மீதம் உள்ளவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பனந்தாள் போலீசார் மற்றும் திருவிடைமருதூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவியாக  உள்ளூர் மீனவர்களும் ஆற்றில் இறங்கி  குலோத்துங்கன், இளங்கோவன் ஆகியோரை வெகுநேரம் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேடும் பணி சனிக்கிழமை வரை நீடித்தது.

போதைப் பொருட்களுக்கு  எதிரான விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி, டிச.23- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இணைந்து போதைப்  பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இப்பேரணி ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவல கத்திலிருந்து தொடங்கியது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் வீ.பாலமுருகன் தலைமை வகித்தார். ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மு.மார்டின் லூதர் கிங்  பேரணியைத் துவக்கி வைத்து, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுத்தொகைகளை வழங்கி, சிறப்புரை ஆற்றி னார்.  நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் அலுவல கத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி, முக்கிய வீதிகள் வழி யாகச் சென்று, பாரத ஸ்டேட் வங்கி அருகில் நிறைவுற்றது.  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாகக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப் பாளர் ப.செந்தில்குமார் வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட  அலுவலர் அலகு-1 மு.பழனித்துரை நன்றி கூறினார்.

டிச.29-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், டிச.22 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிச.29 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10 மணிக்கு, தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட  ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு  புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க விரும்பும்  விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதி நிதிகள் அனைவரும், தங்கள் பெயர், ஊர்  மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல்  10 மணி வரை கணினியில் பதிவு செய்ய வேண்டும்.  விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்னரே மனுக்களை அளிக்க வேண்டும்.  விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும்  விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

நியாய விலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை

தஞ்சாவூர், டிச.23-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது விநியோக கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படியும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகளின் படியும் அமைக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழுக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகளின் விவரம் போன்ற பல்வேறு பொருளடக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு, புதிதாக கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர அங்காடிகள் அமைப்பதற்கு தூரத்தினை பரிசீலனை செய்து புதிதாக பகுதி நேர அங்காடிகள் திறப்பதற்கு அரசுக்கு முன் மொழிவுகள் அனுப்புவது, மாவட்டத்தில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள அங்காடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அங்காடி அளவிலான கண்காணிப்புக் குழுக்களின் கூட்டங்களை அவ்வப்போது நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 5,085 முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைகளுக்கும், 139 அன்னபூர்ணா வகை குடும்ப அட்டைகளுக்கும் தற்போது வழங்கப்படும் அரிசியினை தவிர இதர பொருள்களையும் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வது. பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இன்றி செயல்படுவதை கண்காணிக்க, தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளை ஒரே நேரத்தில் அனைத்து அலுவலர் அடங்கிய குழு ஆய்வு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.

ரயிலில் தவறவிட்ட மடிக்கணினி  உரியவரிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர், டிச.23-  சென்னையிலிருந்து கும்பகோணம் ரயிலில் வந்த  பயணி ஒருவர், தவறவிட்ட மடிக்கணினியை மீட்டு தஞ்சா வூர் ரயில்வே புறக்காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் உரிய வரிடம் ஒப்படைத்தனர். சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் வந்த உழவன் ரயிலில், கும்பகோணம் பச்சையப்பன் தெரு வைச் சேர்ந்த ந.அருண் (29) என்பவர் பயணித்தார். கும்பகோ ணம் ரயில் நிலையத்தில் அவர் இறங்கும் போது, தன்னு டைய மடிக்கணினி பையை மறந்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் தன்னுடைய மடிக்கணினியை தவறவிட்டது தொடர்பாக கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் தஞ்சாவூர் ரயில்வே புறக்காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் தஞ்சாவூருக்கு உழவன் ரயில் வந்ததும் ரயில்வே காவலர்கள், அருண் பயணம் செய்த பெட்டிக்குச்  சென்று, அங்கிருந்த மடிக்கணினி பையை எடுத்து, அருணை  தஞ்சாவூருக்கு வரவழைத்து வழங்கினர். இதனைப் பெற்றுக்  கொண்ட அருண் காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.