districts

img

மலையாளப்பட்டி புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தின் சாவி ஒப்படைப்பு

பெரம்பலூர், செப்.3 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பந் தட்டை வட்டத்திற் குட்பட்ட மலை யாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமு தாயக் கூடத்தினை 14.8.2024 அன்று காணொலி வாயி லாக தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட ஏதுவாக செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்  சமுதாய கூடத்தின் சாவியினை மகளிர் சுய  உதவிக்குழு உறுப்பினர்களிடம் வழங்கினார். இச்சமுதாய கூடத்தின் தரைத்தளத்தில் 60 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடம்,  உணவு தயார் செய்யும் கூடம், அலுவலக  அறை, கழிவறை வசதிகள், பொருட்கள் இருப்பு வைத்துக் கொள்ளும் வகையிலான  02 அறைகளும், முதல் தளத்தில் 120 நபர்கள்  அமரும் கூடம், மணமகன், மணமகள் அறை, கழிவறை வசதிகளும் உள்ளன.  இந்த கூடத்தினை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்கிடும் பொருட்டு சமுதாய கூடத்தினை பராமரிப்பது, பாதுகாப்பாக பயன்படுத்துவது, பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்குவதற்கு மலையாளப் பட்டி ஊராட்சியில் இயங்கி வரும் விளாம்பழம் மகளிர் சுய உதவிக் குழுவைச்  சார்ந்த 12 உறுப்பினர்களிடம் சமுதாய கூடத் திற்கான சாவியினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.