திருவில்லிபுத்தூர், ஏப்.21-
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வடக்கு மலை யடிப்பட்டி எம்ஜிஆர் நகரில் ராஜாதி ராஜா என்ற பெயரில் சர்ச் நடத்தி வருபவர் ஜோசப் ராஜா (49). இவரது சர்ச்சுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தினசரி சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 2022 மே மாதம் 3 ஆம் தேதி அன்று சர்ச்சுக்கு சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரது தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பாதிரியார் ஜோசப் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மாற்றுத்திறனாளிகள் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட் டம் நடத்தியதின் விளைவாக ஜோசப் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழனன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குற்றவாளி ஜோசப் ராஜாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும் அபரா தத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்றுள்ளது.
சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க சிபிஎம் கோரிக்கை
நீதிமன்ற தீர்ப்புக்காக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயும் மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர்.அப்போது குற்றவாளியின் சகோதரர் பெஞ்சமின் பிரபு நேரடி யாக வந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயைப் பார்த்து, தீர்ப்பு எனது அண்ணனுக்கு எதிராக வந்தால் உன்னை மட்டு மல்ல அனைவரையும் வெட்டி விடுவேன். யாரையும் சும்மா விடமாட்டேன் என மிரட்டி சென்றார். நீதிமன்ற வளாகத்தி லேயே மிரட்டி சென்ற பெஞ்சமின் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத் திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.