districts

img

தேசிய நிதியம் உருவாக்க வேண்டும் - மாற்றுத்திறனாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.3 -  டிச.3 அமைப்பு தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் சனிக் கிழமை மாலை தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் சி.ராஜன், ஒன்றியச் செயலாளர் ஏ.சாமி யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.  இளங்கோவன் கண்டன உரையாற்றி னார். மாநகரத் தலைவர் கே.குமார், ஒன்றி யத் தலைவர் பி.சங்கிலிமுத்து மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.  திருவோணம் கடைத்தெருவில் ஒன்றி யத் தலைவர் கே.சிவகுமார் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றி யச் செயலாளர் கோவி.ராதிகா உரையாற் றினார். ஒரத்தநாடு பேருந்து நிலையத்தி லிருந்து ஊர்வலமாக சென்று, அண்ணா சிலை அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் எம்.தங்கப்பன் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி ஆர்ப்பாட்ட உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் பாசமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மதுக்கூர் கடைத்தெருவில் ஒன்றியத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் தலை மையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் சி.ஏ. சந்திரபிரகாஷ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரண் டாம்புளிக்காடு கடைவீதியில் ஒன்றியத்  தலைவர் எஸ்.ஜே.ராஜேஷ் கண்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் ஏ.மேனகா கண்டன உரையாற்றினார். பாபநாசம் கடை வீதியில் ஒன்றியப் பொறுப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டங்களில், ‘மாற்றுத் திற னாளிகளுக்கான தேசிய நிதியம் உரு வாக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் தடையற்ற சூழலை உறுதிப்படுத்த  வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு உயர்த்தி  வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர்  மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.   ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மயி லாடுதுறை ஒன்றியச் செயலாளர் ஜி.மகேந் திரன், தரங்கம்பாடி ஒன்றியத் தலைவர் ஜி.செல்வராஜ், செம்பனார்கோவில் ஒன்றிய அமைப்பாளர் கே.கண்ணன், குத்தாலம் ஒன்றியச் செயலாளர் ராமகுரு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர் டி.கணேசன் மற்றும் மாவட்ட, வட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் உரை யாற்றினர்.

தா.பேட்டை

திருச்சி புறநகர் மாவட்டம் தா. பேட்டை ஒன்றியத்தில் ஞாயிறன்று மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து தலைமையில், மாவட்டத் தலை வர் ரவி சங்கக் கொடியை ஏற்றினார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பாண்டியன் மற்றும் உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடி ஒன்றியத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் தங்கவேல் கொடி யேற்றி உரையாற்றினார். கடல் தொழிலா ளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் முக மது கனி, வர்த்தக சங்கத் தலைவர் சோன கருப்பன், செயலாளர் புகாரி, பொருளா ளர் இந்தியன் கணேசன் மற்றும் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தி லிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல நகரப் பேருந்து வசதி செய்து தர  வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

திருச்சிராப்பள்ளி/புதுக்கோட்டை, டிச.3- உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை  முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் ஞாயிறன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 292 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67  லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை யும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறு வனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதி களவில் வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங் களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் சிறப்புப்  பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இசை கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட மாற்றுத்திற னாளி நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகள் தின விழாவை, புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார். புதுக்கோட்டை  சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.