சிபிஎம் அஞ்சலி அரியலூர், டிச.29 - அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் வசித்து வந்த, கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி அண்ணாதுரை சனிக் கிழமை மாரடைப்பால் காலமானார். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் 1985 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை, செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது உறுப்பினராக சேர்க்கப் பட்டு கட்சியின் கிளை செயலாளராக வும், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும், தற்போது கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்ட வர் வி.அண்ணாதுரை. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். இச்செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எம்.வெங்கடாசலம், ஏ.கந்தசாமி, துரை.அருணன், டி.அம்பிகா, செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ. அருண்பாண்டியன், மாவட்டத் தலை வர் பி.பத்மாவதி, மாவட்டக் குழு உறுப் பினர்கள் அழகுதுரை, கை நெசவு தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.என்.துரைராஜ் மற்றும் செந்துறை வட்டக் குழு உறுப்பினர்கள், கை நெசவு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.