districts

img

குத்தாலம் குறுவட்ட போட்டிகள்

மயிலாடுதுறை, ஆக.21-  மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் குத்தாலம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் 20 அன்று ஸ்ரீகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி சார்பில் மயிலாடுதுறை சாய் விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குத்தாலம் ஒன்றியத் திற்குட்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 300 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். குத்தாலம் குறு வட்ட செயலர் தலைமை ஆசிரியர் முருகானந்தம் வர வேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன் போட்டி யினை துவக்கி வைத்து தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் முன்னிலை வகித்தார்.  விளையாட்டுப் போட்டிகளை  பட்டதாரி ஆசிரியர் வடி வேலன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்திய பள்ளி விளை யாட்டுகள் கூட்டமைப்பின் மாநில கராத்தே அணி மேலாளர் கதிரவன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். குத்தாலம் குறுவட்ட இணைச் செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.