districts

img

குடவாசல் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் திறப்பு

திருவாரூர், மே 10-  

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் ரூ. 317.20 லட்சம் மதிப்பில் புதி தாக கட்டப்பட்ட குடவாசல் ஊராட்சி ஒன்றிய புதிய அலு வலக கட்டிடத்தை காணொலி காட்சி மூலமாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார்.  

   நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலை மை வகித்தார். ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கிளார செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வே.பாஸ்கர்,எஸ்.சாமி நாதன் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

  தொடர்ந்து, அனைத்து ஊராட்சி ஒன்றிய தலை வர்களின் பயன்பாட்டிற்காக புதியதாக வழங்கப்பட்ட வாகனத்தின் சாவியினை ஒன்றியக்குழுத் தலை வர்களிடம் மாவட்ட ஆட்சி யர் வழங்கினார்.