தஞ்சாவூர், ஜூன் 20-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத் திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான, மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜூன் 23 (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவிலும், விவசாயிகளுக்கான மாதாந் திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதியம் 3.30 மணியள விலும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலை மையில் நடைபெற உள்ளது. இந்த குறைதீர்க்கும் கூட்டங் களில் அந்தந்த நேரத்தில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.