தஞ்சாவூர், ஏப்.27-
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துக்கள் தெரி விக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பெயர், ஊர் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்றபின் மனுக்களை அளிக்க வேண்டும்.
இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தங்கள் கருத்துக் களை கோரிக்கைகளாக தெரிவிக்கலாம்” என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.