அரியலூர், ஜூன் 14-
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை யில் நடைபெற்றது.
கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை விதவை உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித் தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மக்கள் அளித்தனர்.
தினக்கூலி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு நிர்ணய ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி அரி யலூர் மாவட்ட உள்ளாட்சித் துறை ஏஐடியுசி சார்பில் பொதுச் செயலாளர் தண்டபாணி ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில், ‘‘உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் நிர்ணயம் செய்து 17.10.2017 தேதியில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை 62-ன் அடிப்படையில், அதற்கு குறையாமல் தினக்கூலி நிர்ணயம் செய்திட வேண்டுமென சென்னை தொழிலாளர் ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு திருப்பூர், திருவள்ளூர், கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் தினக்கூலி ரூ.500-க்கு குறைவில்லாமல் ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் ஆட்சியர் அறிவிக்கும் தினக்கூலி நிர்ணயம் சென்ற ஆண்டுக்கு ரூ.307 அளவில் உள்ளது. இதே கூலியைத் தான் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் உடையார்பாளை யம் பேரூராட்சிகளில் துப்புரவு ஒப்பந்தப் பணியா ளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும் நிலை உள்ளது. தற்போதைய விலைவாசியில் இது சொற்ப கூலியாகும்.
எனவே அரசாணை 62-ன் அடிப்படைகள் பல மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பிக்கும் தினக்கூலி உயர்வினை கணக் கில் கொண்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் தினக்கூலிக் கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ எனக் கூறப் பட்டுள்ளது.
உடன் ஜெயங்கொண்டம் நகராட்சி சிலம்பு செல்வி, ஜெயா உள்ளிட்டோர் இருந்தனர்.