திருச்சிராப்பள்ளி, ஆக.31 - திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.பிரதிவ் சந்த் விழாவை துவங்கி வைத்தார். கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் மாணவர்களுக்கான உறுதிமொழி மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கான அறிக்கையை வாசித்தார். இதில் கிராமலயா தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் பி.எஸ்சி இன்டீரியர் டிசைன் பாடப் பிரிவில் ஒன்று முதல் ஐந்து இடங்களையும், பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் பெற்ற மாணவர்களுக்கு தர சான்றுகள் வழங்கப்பட்டன. அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.