districts

ஏழை விவசாயிகளுக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடைவதில்லை ஜூலை 27இல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 17-  

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றிய  பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்கத்தின் ஒன்றிய துணைத்  தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    பேராவூரணி தாலுகாவிற்குட்பட்ட சித்தாதிக்காடு, பின்னவாசல் மற்றும் ஆத னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை  மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு, அரசின்  வேளாண் நலத்திட்டங்கள் சென்று சேரா மல், குறிப்பிட்ட பெருவிவசாயிகளுக்கு மட்டும் சென்றடைகிறது. இதனை கண்டித்  தும், அரசின் வேளாண் சார்ந்த நலத்திட் டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும், குறிப்பாக சிறு-குறு விவசாயிகளுக்கு சென்றடைய வலியுறுத்தியும், பல ஆண்டு  காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும், வேளாண் துறை அனைத்து நிலை அலு வலர்களையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

     இடுபொருட்கள், வேளாண் கருவி களுக்கு அரசு அறிவித்துள்ள மானியங்  களை அப்படியே வழங்க வேண்டும் என  வலியுறுத்தி, ஜூலை 27 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, பேராவூரணி வேளாண்  அலுவலகம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்  பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப் பட்டது.  

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஜாக்கு லின், ஏ.வி.குமாரசாமி, பேராவூரணி ஒன்றிய செயலாளர் சிதம்பரம், ஒன்றிய பொருளாளர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி, திருவேங்கடம், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.