districts

img

ஆளுநர்களை வைத்து அதிகாரம் செலுத்தும் பாஜகவின் அராஜக அரசியலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, அக்.31 - மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் திங்களன்று மாலை நடைபெற்றது. மக்களால் தேர்வு செய் யப்பட்ட கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் மீது ஆளுநர்களை வைத்து  அதிகாரம் செலுத்துகிற பாஜ கவின் அராஜக அரசியலை கண்டித்து நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், டி.சிம்சன், சி.விஜயகாந்த், ஜி.வெண்ணிலா ஆகியோர் உரையாற்றினர். மயிலாடு துறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, சீர்காழி ஒன்றிய  செயலாளர்கள் ஏ.ரவிச்சந்தி ரன், அசோகன், கே.பி.மார்க்ஸ், மயிலாடுதுறை நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய் மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;