குடவாசல், ஏப்.19- நன்னிலம் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட் டோரை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்திட வலியுறுத்தியும், நில அளவையர் அலுவலக ஊழி யர்களின் அலட்சியத்தை கண்டித் தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.முகமது சலாவுதீன் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் எஸ்.சுரேந்தர், ஒன்றியப் பொ ருளாளர் கே.எம்.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ. முகமது உதுமான் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் சரவணன் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.