districts

img

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நகரங்கள்

அரியலூர்/பாபநாசம், ஜன.16- கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன் தமிழகத்தில் கோவில்கள், வணிக வளாகங்கள், கடை கள் அனைத்தும் அடைக்கப் பட்டன. போக்குவரத்து முற்றி லும் நிறுத்தப்பட்டதால் சாலை கள் வெறிச்சோடி காணப் பட்டன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முடிந்து  ஞாயிறன்று காணும் பொங் கல் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி உலகப் புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம், வைத்தியநாத சுவாமி  ஆலயம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆல யம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் காணும் பொங்க லையொட்டி சுற்றுலாத் தலங் களுக்கு வந்த, சுற்றுலா பய ணிகள்   கோயில் நடை அடைக் கப்பட்டு இருந்ததால் கோயி லுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். பாபநாசம் பாபநாசத்தில் ஹோட்டல்,  மளிகை கடை, ஹார்டு வேர்ஸ், ஸ்டேஷ்னரி, நகை  கடைகள் உள்ளிட்ட அனை த்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. எப்போதும் பர பரப்பாக காணப்படும் கும்ப கோணம் - தஞ்சாவூர் மெயின்  சாலையில் ஒரு சில இரு  சக்கர வாகனங்கள் மட்டுமே  சென்றன. பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளான கபிஸ் தலம், ராஜகிரி, புதிய பேருந்து நிலையம் வெறிச் சோடி காணப்பட்டன.