districts

img

போதைப் பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர், ஜன.12 -  தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை தஞ்சை மாவட்டம் சார்பில், ‘மது  அருந்துதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டு தல், போதை பொருட்களை தவறான முறையில்  பயன்படுத்துதல்’ ஆகியவற்றிற்கு எதிரான விழிப் புணர்வு பேரணி பட்டுக்கோட்டை பேருந்து நிலை யத்தில் தொடங்கியது. பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை, கலால்துறை தஞ்சை உதவி ஆணையர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொ டங்கி வைத்தார். கோட்ட அலுவலர் சுமதி, பட்டுக் கோட்டை (பொ) வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி  மணிக்கூண்டு, மார்க்கெட், தபால் அலுவலகம்  உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்து,  நீதிமன்றம் அருகில் நிறைவடைந்தது. இந்த   விழிப்புணர்வு பேரணியில் மனோரா ரோட்டரி  சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.