அரியலூர், மே.14-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தினம் ஒரு திருக்குறள் 34- ஆவது பலகை திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளு வர் ஞானமன்றம் நிறுவனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருக்குறள் பலகையை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் மணிவண்ணன் திறந்துவைத்தார். நிகழ்வில் மருத்துவர் லட்சுமி, கரடிகுளம் சங்கீதா கண்ணன், புலவர் தங்கராசு, எம்.ஆர்.கல்லூரி நூலகர் குமரமணி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி கீர்த்தனா பாராட்டப்பட்டார். திருக்குறள் பரப்புரையாளர் மணிவண் ணன் நன்றி கூறினார்.