புதுச்சேரி,பிப்.29- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர்கள் சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்தினர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் இருந்து துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன அறக்கட்டளை தலைவர் கே. முருகன் பேரணியை துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச் செய லாளர் ராதாகிருஷ்ணன், பொரு ளாளர் கிரிஸ்டோபர், சம்மேளன நிர்வாகிகள் சீதாராமன், கீதா, வின்சென்ட் ராஜ், ஆனந்த கணபதி, சிவஞானம், முனுசாமி, ஞான சேகரன், நமச்சிவாயம் உட்பட இணைப்புச் சங்க நிர்வாகி கள் பேரணியில் திரளாக பங்கேற்ற னர். அண்ணா சாலை, நேரு வீதி யில் சட்டப்பேரவை அருகே ஊர்வ லம் நிறைவடைந்தது. இதனை தொடந்து முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் அரசு ஊழியர்கள் சம்மேளனம் தலைவர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து பிரதிகளை பெற்றுக்கொண்ட முதல்வர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.