மயிலாடுதுறை, பிப்.2 - பொறையாரிலிருந்து சீர்காழி வரை கடலோர மீனவ கிராமங்களை இணைக்கும் விதமாக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை துவங்கியது. கிராம மக்கள் இப்பேருந்தை மலர்தூவி வரவேற்ற னர். மயிலாடுதுறை மாவட்டம் பொறையார், தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பெரு மாள்பேட்டை, புதுப்பேட்டை மாணிக்க பங்கு, சின்னங்குடி, வானகிரி, தருமகுளம், பூம்புகார் வழியாக கிழக்கு கடற்கரைச் சாலை யில் சீர்காழி வரையிலான வழித்தடத்தில் பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடலோர கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து வழித்தடம் துவங்கப்பட்டுள்ளது. பொறையார் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற துவக்க விழாவில், புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் பேருந்தை ஓட்டிச் சென்றார். அரசு போக்குவரத்து பொறையார் கிளை மேலா ளர் ஆசீர்வாதம், தொமுச வீரமணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தரங்கம்பாடி, மாணிக்கபங்கு, குட்டி யாண்டியூர், சின்னங்குடி, மருதம்பள்ளம், வானகிரி, தருமகுளம் உள்ளிட்ட கிராமங்களில் வந்த புதிய பேருந்துக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.