திருத்துறைப்பூண்டி, மே 10-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 54 பேர் காய மடைந்தனர்.
திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியகாடு செல்லும் அரசு பேருந்து, பாண்டி வளைவு அருகே சென்ற போது வாய்க்காலில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி சென்று பேருந்தில் சிக்கி இருந்த 54-க்கும் மேற் பட்ட பயணிகளை மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த 15 ஆண்கள், 39 பெண்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 10-க்கு மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். விபத்து குறித்து எடையூர் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.