கும்பகோணம், மார்ச் 19- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசினர் கலைக் கல்லூரி மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்திய 135 ஆவது குருதிக்கொடை (ரத்த தானம்) முகாம் கல்லூரி முதல்வர் மாதவி, தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி இணை இயக்கு நர் தனராஜன், இணை பேராசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், குணசேகரன், யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றி வேல், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுகந்தி முத்தையா, செவி லிய கண்காணிப்பாளர் சலீம் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.