திருச்சிராப்பள்ளி, மே 25-
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருச்சி (மேற்கு) வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலா ளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர் கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மேற்கு வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலு வலகத்தில் மே 27 (சனிக்கிழமை) அன்று காலை 11 மணிய ளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் திருச்சி (மேற்கு) வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.