நாகர்கோவில், அக். 2- மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் அன்னாரது உருவப்படத்தி ற்கு, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்க ராஜ்,மாவட்ட ஆட்சித்தலை வர் பி.என்.ஸ்ரீதர் தலை மையில் திங்கள்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொ டர்ந்து காமராஜர் சிலைக் கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்ச்சிகளில் நாகர்கோ வில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) எஸ்.செல்வலெட் சுஷ்மா உட்பட அலுவலர்கள், பணி யாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாவட்ட தலைவர் சாலாம் தலைமையிலும், மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாவட்ட தலைவர் நாக ராஜன் தலைமையிலும் நாகர்கோவில் , வடசேரி, காந்தி பூங்காவில் அமைந் துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி மாலை காந்தி சிலைக்கு அணிவித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அந்தோனி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் அகமது உசேன், நாகர்கோவில் மாநகர செயலாளர் மோ கன், மனோகர ஜஸ்டஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருநெல்வேலி பாளை ஆயுதப்படை சாலையில் உள்ள கதர் அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு காந்தி யடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு நடை பெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.