districts

  பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ  தலைவரும் சட்டமன்ற குழுத் தலைவரு மான ஜி.கே.மணி

சென்னை, ஆக.26-

      பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவ  தலைவரும் சட்டமன்ற குழுத் தலைவரு மான ஜி.கே.மணி கடந்த சில நாட்களாக  உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தார். தொண்டை வலியில் பேச முடி யாமலும், தொடர் தலைவலி, தலை சுற்றல் ஆகியவற்றாலும் அவதிப் பட்டார்.

     சிறப்பு மருத்துவர்கள் பரிசோ தனை செய்ததில் தொண்டை குரல் வளையில் ஏற்பட்டிருக்கும் கட்டியை அகற்ற வேண்டும் என்றனர். இதை யடுத்து அவர் சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

     சனிக்கிழமை (ஆக.26) காலை 11 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதற்கு முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  ஜி.கே.மணியை சந்தித்து ஆறுதல் கூறி னார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகரனி டம் ஜி.கே.மணிக்கு மேற்கொள்ளப்பட விருக்கும் மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தார்.