districts

img

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிடிவாதமாக நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு

இ.பெரியசாமி சாடல் சின்னாளப்பட்டி, பிப்.9- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்  றிய பட்ஜெட்டில் தமிழ கத்தை வஞ்சித்த ஒன்றிய அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்ட மன்ற உறுப்பினருமான ஐ.பி.  செந்தில்குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் காமாட்சி, துணைச் செயலா ளர்கள் நாகராஜன், பிலால் உஷேன், மார்க்ரேட் மேரி,  பொருளாளர் சத்தியமூர்த்தி,  ஒன்றிய செயலாளர்கள் கரி காலபாண்டியன், சவுந்தர பாண்டியன், கே.பி.முருகன்,  கனிக்குமார், நகரச் செயலா ளர்கள் விஜயக்குமார், சின்ன துரை, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்புரை யாற்றிய அமைச்சர் ஐ. பெரியசாமி, தமிழ்நாட்டு பெண் என விளம்பர படுத்  திக் கொள்ளும் ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் பட்ஜெட்டில் தமிழ் நாடு என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு கூட ஒன்றிய பட்  ஜெட்டில் நிதி ஒதுக்க வில்லை. அதானி அம்பா னிக்காக ரூ.25 லட்சம் கோடி  கடன் தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு, ஏழை எளிய மாணவ -மாணவியர்களின் கல்விக் கடனை கூட தள்ளு படி செய்யவில்லை என பேசி னார். முடிவில் நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை நன்றி கூறி னார்.