அக்.17 முதல் நவ.10 வரை உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
அரியலூர், அக்.13- அரியலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும் உழவர் பாதுகாப்பு திட்ட முகாமினை விவ சாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், தற்போது ஏழை- எளிய மக்கள் பயன்பெறும் நோக்கத்தில் வடிவமைக் கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள், விவசா யக் கூலி தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, திரு மண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியத் தொகை, நலிவ டைந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கான ஓய்வூதி யத் தொகை, விபத்து நிவாரணத் தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு நிவாரணத் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. இதை அனைத்து பயனாளிகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அரியலூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் குறுவட்டம் வாரியாக முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, செந்துறையில் அக்.17, ஜெயங்கொண்டத்தில் அக்.18, அரியலூரில் அக்.19-இல் வட்டாட்சியர் அலுவல கங்களில் நடைபெறுகிறது. ஆண்டிமடத்தில் அக்.20, தா. பழூரில் அக்.25, திருமானூரில் அக்.26-இல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. ஆர்.எஸ்.மாத்துர் வருவாய் அலுவலகத்தில் அக்.27 அன்று நடைபெறுகிறது. கீழப்பழுவூர் அழகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.31, ஏலாக்குறிச்சியில் நவ.1, பொன்பரப்பியில் நவ.2, உடையார்பாளையத்தில் நவ.3, நாகமங்கலத்தில் நவ.7, குவாகத்தில் நவ.8 அன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது. குண்டவெளியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நவ.9, சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் நவ.10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தகுதியுள்ள அனைவரும் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்” என்றார்.
அரசு விதிகளை மீறும் பட்டாசு ஆலை, கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
அரியலூர், அக்.13- அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவல கத்தில், பட்டாசு ஆலை நிர்வாகிகள் மற்றும் வெடிக்கடை உரிமையாளர்களுடன் கலந்தாய் வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், அவர் தெரிவிக்கையில், “ஆலைகள் வரைபடத் தில் உள்ளவாறு கட்டட அமைப்பு இருக்க வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே வெடிமருந்து இருப்பு வைக்க வேண்டும். உற்பத்தி செய்த வெடி பொருள்களை உடனடியாக குடோனில் பாது காப்பாக வைக்க வேண்டும். சிமெண்ட் ஆலைகளில் உள்ள வெடி மருந்து கிடங்குகளில் பராமரிக்கும் ஊழி யர்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளில் வேலை செய்ய தொழிலாளர்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முன் அனுபவமுள்ள தொழிலாளர்களை கொண்டு வெடி மருந்துகளை கவனமுடன் கையாள வேண்டும். தீ அணைப்பான் கருவிகள் உட்பட அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் முறை யாக பராமரிக்க வேண்டும். இரு சக்கர வாக னம் உட்பட அனைத்து வாகனங்களையும் ஆலைக்கு வெளியில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதுபோன்று அரசு அறிவுறுத்தி யுள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்
ஆட்சியர்கள் அறிவிப்பு தஞ்சாவூர்/மயிலாடுதுறை, அக்.13- தமிழ்நாடு அரசு சார்பில், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரி களில், அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபி னர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்க ளின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50, 000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பாண்டில் புதுப் பித்தல் மாணாக்கர்கள் https: //ssp.tn.gov.in என்ற இணைய தளம் முகவரியில் Student login-ல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verfication செய்ய வேண்டும். இதில் ஏதா வது இடர்ப்பாடு ஏற்படும் பட்சத்தில், தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகலாம். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal), புதுப்பித்தலுக்கு (Rene wal) 18.10.2023 முதல் செயல் பட துவங்கும். புதுப்பித்தலுக் கான (Renewal) விண்ணப்பங் கள் மாணவர்களால் 18.11. 2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண் டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவி யாளரையோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகலாம்” எனக் கூறப்பட்டு உள்ளது. இத்தகவலை மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
அக்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, அக்.13 - தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து, கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் 19. 10.2023 (வியாழன்)அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இதில் 18 முதல் 45 வயதிற் குட்பட்ட 5 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னணி தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட உள்ள னர். எனவே, படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு உதவி அலுவலர் கைது
தஞ்சாவூர், அக்.13- ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக தனியார் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடை யில்லா சான்று பெறுவதற்காக அதன் அலுவலர்கள் அரண்மனை வளாகத்திலுள்ள மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் எஸ்.முனி யாண்டியை (56) சந்தித்தனர். அப்போது ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு முனியாண்டி கேட்டுள் ளார். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது எனக் கூறிய மருத்துவ மனை அலுவலர்களிடம், ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.14 ஆயிரம் தருமாறு முனியாண்டி கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை அலுவலர்கள், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார். இதை யடுத்து ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.நந்த கோபால் தலைமையில், ஆய்வாளர்கள் டி.பத்மாவதி, ஆர்.அருண் பிரசாத் உள்ளிட்டோர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்து இருந்தனர். அப்போது முனியாண்டி கூறியபடி, மருத்துவமனை அலுவ லர்கள் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து ரூ.14 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். இதையடுத்து அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், தனியார் மருத்துவமனை அலுவலர்களிடம் ரூ.14 ஆயி ரம் லஞ்சம் வாங்கிய மாவட்டத் தீயணைப்பு உதவி அலுவலர் முனி யாண்டியை கைது செய்தனர்.
மரச்சாமான்கள் எரிந்து நாசம்
தஞ்சாவூர், அக்.13 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கடை வீதியில், கணேசன் ஆசாரி என்பவர் மரச் சாமான்கள் தயாரித்து விற்பனை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக் கிழமை அதிகாலை திடீரென மரப்பட்டறை தீப்பற்றி எரியத் தொ டங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் மரப் பட்டறையில் இருந்த இயந்திரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின. தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு வேன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேக்கு, பலா, பூவரசு உள்ளிட்ட பல வகை மரங்கள், அறுத்து வைக்கப்பட்டிருந்த பலகைகள், தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பீரோ, கட்டில், மேஜை உட்பட சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரண மாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
உலக பார்வை தின விழிப்புணர்வு
பாபநாசம், அக்.13 - உலக பார்வை தினத்தை முன்னிட்டு மனிதவளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக்கட்டளை சார்பில் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தை அடுத்த சுவாமிமலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிற்பச் சிலை கலைஞர்கள், மர வேலைப்பாடு செய்வோர், வியாபாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய துண்டு பிர சுரம் வழங்கப்பட்டது. இதன் முதல் பிரதியை திருநங்கை ரம்யா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அறக்கட்டளை நிறுவனர் சபாபதி செய்திருந்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை, அக்.13 - புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் கிளிக்குடியில் வரு வாய்த்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில், வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை, தொழிலாளர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவிக் குழு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 568 பயனா ளிகளுக்கு ரூ.1,21,67,701 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவி களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
புகைப்பட கலைஞர்கள் போராட்டம்
அறந்தாங்கி, அக்.13 - காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகம் எதிரில், அறந்தாங்கி மண்டல புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் சுந்தர்ராஜன், ஆலோசனைக் குழு உறுப்பினர் சேகர், செயலாளர் அன்புசரவணன், பொருளாளர் கோல்டன் சதீஸ் மற்றும் கவுன்சிலர்கள், அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் உறுப்பி னர்கள் உட்பட பலர் உரையாற்றினர். இதில் அறந்தாங்கி சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க எதிர்ப்பு
புதுக்கோட்டை, அக்.13 - ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமனம் செய்யாமல் போதுமான அளவுக்கு நிரந்தரத் தொழிலாளர்களை பணி நியமனம் செய்யக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நகர் கிளைச் செயலாளர் டி.ஆனந்தன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணி யன், சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், பொருளாளர் எம்.தரணிமுத்துக்குமார், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் லோகநாதன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
பருவமழை முன்னேற்பாடு கூட்டம் 24 மணிநேரமும் கண்காணிப்பில் இருக்க அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் அறிவுறுத்தல்
கும்பகோணம், அக்.13- வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம், திருவிடை மருதூர், பாபநாசம் வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோட்டாட்சியர் பூர்ணிமா பேசுகையில், “வடகிழக்கு பருவமழை அக் டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும். அத னால் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். தாலுகா அலு வலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு, வெள்ள பாதிப்பு குறித்த முன்னேற்பாடு பணிகளை மேற் கொள்ள வேண்டும். தினசரி மழையளவு, மழை நிலவரம், மழைக்கால உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் பாதிப்பு போன்ற நிலவரங்களை உடனே மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு களை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையினர் நீர்நிலைகள், குட்டைகள், திறந்தவெளி கிணறு போன்றவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும். பொதுமக்களை தங்க வைப்பதற்கு பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், மண்டபங் களை தயார்படுத்த வேண்டும். அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் மணல் மூட்டைகள், மீட்பு பணிக்கான பவர் பம்புகள், ஜெனரேட்டர் போன்றவை தயார் நிலையில் இருக்க வேண்டும். ரேசன் கடைகளில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர், தாழ்வான மின் கம்பிகளை சீர்படுத்த வேண்டும்” என்றார்.
புதிய தார்ச்சாலை எப்போது அமைக்கப்படும்? ஒலியமங்கலத்தில் மறியல் போராட்டம்
பொன்னமராவதி, அக்.12 - பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்க லம் ஊராட்சி சுந்தம்பட்டி மற்றும் சேர்வைக் காரன்பட்டி செல்லும் சாலை பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. விரை வில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டும் என கோரி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலை மையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் புதிதாக சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுத்து சாலை அமைத்து தரவில்லை. இதனால் பொதுமக்கள் ஒலியமங்கலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையிலான அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு மாதத்தில் புதிய சாலை அமைத்து தரப்படும். தற்காலிகமாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்து தரப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
கொள்ளிடம் ஆற்றின் திட்ட பணிகளுக்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
மதுரை, அக்.13- கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, மதகு, கதவணை உள்ளிட்ட திட்ட பணி களுக்கு கையகப்படுத்தப்பட்ட விவ சாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித் துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளி டம் ஆற்றில் தடுப்பணை, பாலம், மதகு, கதவணை கட்டுவதற்கு கைய கப்படுத்திய விவசாய நிலங்களுக்கு 2013-ம் ஆண்டின் நிலம் கையகப் படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கக் கோரி தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொள்ளிடம் ஆற்றில் தடுப் பணை, பாலம், மதகு கட்டுமானப் பணிக்கு உயர் நீதிமன்ற கிளை இடைக் கால தடை விதித்திருந்தது. மேலும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கடலூர், தஞ்சாவூர், மயிலா டுதுறை மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டும் இழப்பீடு வழங்காத கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதி பதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. அப்போது கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, மதகு, கதவணை உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது என தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்களை வழங்கியவர்களின் விபரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளது. சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளது என தெரி வித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விரிவான விசாரணைக்காக நவம்பர் 10ம் தேதிக்கு வழக்கை நீதிபதி கள் ஒத்தி வைத்தனர்.
ஏழை மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குக! திருநல்லூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக்.13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் திரு நல்லூர் ஊராட்சியில் ஏழை-எளிய மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். திருநல்லூர் நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு தனியாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். திருநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் வேகத்தடை அமைத்து, அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூறு நாள் வேலைக்கான அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திரு நல்லூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கோ.ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கட்சி யின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், கே.அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகரா ஜன், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் என்.கணேசன் ஆகி யோர் உரையாற்றினர்.