திருச்சிராப்பள்ளி, ஜூன் 15 - இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறு வனமான ரயில்வே துறையை தனியார்கள் கொள்ளை அடிக்க அனுமதிப்பதை கண்டித்தும், கோவை முதல் சீரடி வரை தனியார் ரயில் இயக்க அனுமதி அளித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் டி.ஆர்.இ.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்சனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்டத் தலைவர் சுப்பிர மணியன் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க உதவி கோட்ட தலைவர் கரி காலன், கோட்ட செயலாளர் மாதவன், உதவி கோட்ட செயலாளர் ராஜா, ஒர்க் ஷாப் டிவிசன் தலைவர் மகேந் திரன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், மாவட்ட துணை செய லாளர் மணிமாறன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
கும்பகோணம்
தட்சிண ரயில்வே தொழி லாளர் யூனியன் (சிஐடியு) சார்பில் கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ரயில்வே தொழிலாளர் சங்க கோட்ட துணை செயலாளர் அழகிரி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கோட்ட துணைத்தலைவர் மன்னை.மனோகரன், முன்னாள் ரயில்வே ஊழி யர்கள், சிஐடியு தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் சா.ஜீவபாரதி, மாவட்ட பொருளாளர் கண்ணன், சிபிஎம் தஞ்சை மாவட்ட செய குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகர செய லாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ஏசுதாஸ், ஓய்வூ தியர் சங்க மாவட்ட செயலா ளர் ராஜகோபால், துணைத் தலைவர் அன்புமணி, செயற் குழு உறுப்பினர் ஜி. கண்ணன் உள்ளிட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.