“சுதந்திரப் போராட்ட வீரரும் முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என். சங்கரய்யா அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் செவ்வணக் கத்தோடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலை யில் தோழர் என். சங்கரய்யா அவர்களின் மறைவு என்பது உள்ளபடியே ஈடுசெய்ய முடி யாத இழப்பாகும். நாட்டின் இறையாண்மைக் கும் மதச்சார்பின்மைக்கும் இந்திய அரசிய லமைப்பிற்கும் கடும் அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ள சூழ்நிலையில், தன் வாழ்நாளில் சுய நலமற்ற கட்சி பேதமற்ற தன்னலமற்ற மக்கள் பணியாற்றிய ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியினை இழந்துள்ளோம் என்பது மிகவும் வேதனையளிக்கக் கூடிய செய்தியாகும். தோழருக்கு நாம் செய்யும் மரியாதை - அஞ்சலி என்பது தோழர் என். சங்கரய்யா அவர் கள் வாழ்நாளில் உயர்த்திப் பிடித்த ஜனநாயக விழுமியங்களை தாழவிடாது நாமும் உயர்த்திப் பிடிப்போம் என்று சபதமேற்பதேயாகும்”
செயலாளர் சு.ஹரிசங்கர்,
இணைச் செயலாளர் (பொது)
இரா.லெனின்,
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்.