தஞ்சாவூர், டிச.9 - தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தஞ்சாவூர் மாவட்ட 2 ஆவது மாநாடு, தஞ்சாவூர் வ.உ.சி நகர் மாஸ் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் தலைமை வகித்தார். மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர் வர வேற்றார். மக்கா பள்ளி தலைவர் ஏ. ஜாஹிர் உசேன், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாநகரச் செயலாளர் எம்.கோஸ்கனி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் வேலை அறிக்கை வாசித் தார். மாநில பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாநில துணைத் தலைவர் ஹாஜி மூசா நிறை வுரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயி னுலாபுதீன், ஏஐஐசி மாநிலச் செயலா ளர் பாஸ்டர் கே.டேவிட் துரை, சிறு பான்மை மக்கள் நலக்குழு பாபநாசம் ஒருங்கிணைப்பாளர் தவ்பீக், பேரா சிரியர் ஆஷிக் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகி கள் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறுபான்மையின மக்கள், இளை ஞர்களை விடுதலை செய்ய வேண் டும். மோடி அரசால் நிறுத்தப்பட்ட சிறு பான்மையினருக்கான கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டும். தலித் கிறிஸ்த வர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் மாநாட்டில், மாவட்டத் தலைவ ராக பி.எம்.காதர் உசேன், செயலாள ராக என்.குருசாமி, பொருளாளராக ஹெச்.அப்துல் நசீர், துணைத் தலை வர்களாக பி.செந்தில்குமார், எஸ்.ஞானமாணிக்கம், ஜாகிர் உசேன், கோஸ்கனி, டேவிட் துரை, துணைச் செயலாளர்களாக ஏ.ஆர்.ஷேக் அலாவுதீன், வியாகுலதாஸ், ஷேக் முகம்மது மற்றும் மாவட்ட குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநகர துணைத் தலைவர் என். குருசாமி நன்றி கூறினார்.