districts

img

ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

புதுக்கோட்டை, ஆக.21- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை தாரா மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் வெங்கடேஸ்வராமெட்ரிக்பள்ளியில் புதன்கிழமை நடத்தியது. முகாமை தாரா மருத்துவனை நிறுவனர் மருத்துவர் தனசேகரன் துவக்கி வைத்தார். அவர் பேசும்போது, அதிமுக்கியமானது  இங்கே பெரும்பாலான குழந்தைகள் வயிற்று வலி, குடல் புழு, தலைவலி, உடல் சோர்வு என்று தங்கள் பிரச்சனைகளை கூறுகிறார்கள். பெற்றோர்கள். குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகள், பழங்கள் கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு களையோ, குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்ட தின் பண்டங்களையோ கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. வருகின்ற மழைக்காலங்களில் குழந்தைகளை குளிக்க வைக்கும்போது நல்ல தண்ணீரில் சுடுநீரில் குளிக்க வைத்தால் சளி இருமல் வராமல் தடுக்கலாம் என்றார். மருத்துவர்கள் கிஷோர், சசிரேகா,ராஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவ முகாமில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். இயக்குநர் சுதர்சன் துணை முதல்வர் குமாரவேல், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.