ஈரோடு, மே 12- போட்டித் தேர்வுக்காக இலவச நூலகம் திறப்பு விழா ஈரோடு ஈகேஎம் அப்துல்கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள் ளியில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், செல்லபாட்ஷா வீதியில் நூலகத் திறப்பு விழா நடைபெற்றத். இந்நிகழ்ச்சிக்கு டீம் போட்டித் தேர்வு இலவச நூலக தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் ஏ.ஹாத்திம்தாய் வரவேற் றார். ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள் ளியின் தாளாளர் கே.செல்வராஜ் நூலகத்தை திறந்து வைத் தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜமா அத்துல் உலமா சபை செயலாளர் ஃபைஜுர் ரஹ்மான், காசிபாளையம் பேரூ ராட்சி முன்னாள் தலைவர் கே.துரைராஜ், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.