districts

img

வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

கோவை, ஜூன் 23- டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஞாயிறன்று துவங்கியது. கோவை மாவட்டம், திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி ஊழியர் சங்க கட்டிடத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், வங்கி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஞாயிறன்று துவங்கியது. பயிற்சி  மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.சுரேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் யு.கே.சிவஞானம் வகுப்பினை  துவக்கி வைத்தார். எல்ஐசி ஊழியர் சங்க கோவை கோட்ட  பொதுச்செயலாளர் துளசிதரன், இந்தியன் வங்கி ஊழியர் சம் மேளன மாநில நிர்வாகி மகேஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, பயிற்சி மையத் தின் ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதைத்தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத் தில் பயின்று, வங்கி அதிகாரியாக பணியாற்றும் செல்வி, நிஷாந்தி, எல்ஐசி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாக பணி யாற்றும் மணிமேகலை மற்றும் தற்போது வங்கி தேர்வில்  வெற்றி பெற்று பணி நியமனம் பெற உள்ள பார்வை மாற்றுத்தி றனாளி சங்கர் ஆகியோர் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். முதல் நாள் வகுப்பில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.