டிஎன்பிஎல் முன்னாள் ஊழியர் முத்துக்கிருஷ்ணன் - கீதா, பவானியை சேர்ந்த முன்னாள் செயற்பொறியாளர் நாராயணசாமி - சித்ரபிரபா ஆகியோரின் இல்லத் திருமண வரவேற்பு விழா பவானியில் நடைபெற்றது. மணமக்கள் அபிநயா - ஹரிஹரசுதன் ஆகியோர் சிஐடியு சங்க கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம், சென்னை அயனாவரத்தில் இயங்கும் சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினர். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சண்முகம், ஹோசிமின், ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பூரணம், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.