பட்டுக்கோட்டை, பிப்.24- அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி யில் நடந்த ஆண்டு விழா வில் தமிழ்நாட்டின் முன் னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 16 ஆம் ஆண்டு விழா, உணவுத் திரு விழா நடைபெற்றது. நிகழ்ச் சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் லெ.கோவிந்த ராசு தலைமை வகித்தார். ஆண்டு விழாவில் தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக் குநர் சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். உணவுத் திருவிழாவில், பாரம்பரிய உணவு வகை கள், சிறுதானிய சிற்றுண்டி கள் உள்ளிட்ட உணவு வகை களை மாணவர்கள் தயார் செய்து காட்சிக்கு வைத்திருந் தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.