மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.