மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் திமுக சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. செம்பனார்கோவில், பொறையார், திருக்கடையூர், திருக்களாச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு, பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.