தஞ்சாவூர், ஏப்.20-
தமிழ்நாடு உளுந்து தேவையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக, வேளாண்மை - உழவர் நலத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
பயறுவகை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, விவ சாயிகள் தனிப்பயிராக மட்டும் இல்லாமல், வரப்பு பயிராக உளுந்து சாகுபடி, ஊடுபயிராக உளுந்து சாகுபடி, நெல் தரிசில் உளுந்து சாகுபடி என பல்வேறு முறைகளை மேற் கொள்ள வேண்டும்.
உளுந்து பயிரில், விளைச்சலை அதிகப்படுத்த வம்பன் - 11 ரக விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ரக விதைகள் நடப்பு சித்திரைப் பட்ட பருவத்திற்கு ஏற்றது. விவ சாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
வம்பன் -11 ரக விதைகள் மூலம் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும் போது, பயிர்கள் 30 முதல் 40 செ.மீ. உயரம் வரை வளரும். மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்கள் தாக்காத வகையில், வம்பன் -11 ரக விதை களுக்கு எதிர்ப்பு சக்தி உள்ளது.
எனவே, நடப்பு சித்திரைப் பருவத்தில் விவசாயிகள் இந்த உளுந்து விதைகளை பயன்படுத்தி பயிர்சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் முனைவர் விநாயகமூர்த்தி தெரிவித் துள்ளார்.