வேதாரண்யம் ஒன்றியம் பிராந்தியங்கரை ஊராட்சிக்குட்பட்ட மேல பிரதிங்கரை, அண்டகத்துறை, கண்ணறிந்தான், கட்டளை பெரிய கோவில் பத்து மூலக்கரை பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளர். ஏ. வெற்றியாளன், எஸ்.எம்.முருகையன். ஏ. தனிக்கொடி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் வியாழனன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.