districts

img

மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை கேட்டு மனு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 28 -

      மாற்றுத்திற னாளிகளுக்கு நூறு நாள் வேலை வழங்கக் கோரி துறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தினந்தோறும் வேலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி கூலி ரூ.600 வழங்க வேண்டும். துறையூர் தாலுகாவில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதையும், தரக்குறைவாக பேசுவதையும் கைவிட வேண்டும். வீடு இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.

     துறையூர் தாலுகாவில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் துறையூர் ஒன்றியக்குழு சார்பில் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.  

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டத் தலைவர் ரவி, மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், மாவட்ட துணைத்தலைவர் சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் பேசினர்.  

     பின்னர் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர், இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.