பட்டுக்கோட்டை, ஏப்.25-
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முன்னெடுப்பில், பெங்களூரில் உள்ள ஓமைகாரீகேப் பெடரேஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பில், பட்டுக் கோட்டை வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 45 நபர்களுக்கு, ரூ.3.75 லட்சம் மதிப்பிலான செயற்கைக் கை, கால்கள், ஊன்று உபகரணங்கள், சக்கர நாற்காலி கள், காது கேட்கும் கருவிகள், மூன்று சக்கர நாற்காலி கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் கஸ்தூரி தலைமை வகித்தார். தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் தினேஷ், செந்தில் ஆகி யோர் உதவி உபகரணங்களை வழங்கிப் பேசினர்.
நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, மதுக்கூர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலாளர் பிரகாஷ் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றியப் பொறுப்பாளர் மணிகண்டன் செய்திருந்தார்.