districts

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டை, ஜூன் 20 -

    மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்  பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் திங்கள்கிழமை பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழா விற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை  வகித்தார். விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகி யோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

   மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்  பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 7,616 பேர் பங்கேற்று விளையாடியதில் 1,470 விளையாட்டு வீரர்,  வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.3,000, இரண்டாமிடம் பிடித்த வர்களுக்கு ரூ.2,000, மூன்றாமிடம் பிடித்தவர்களுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.30,14,000 மதிப்பிலான பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.  

    மேலும், மாநில அளவிலான தமிழ்நாடு முதல மைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். முதலிடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.1,00,000, இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75,000, மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.50,000 என  பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளதாக அமைச் சர்கள் தெரிவித்தனர்.  

   சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, நகர்  மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.