தஞ்சாவூர், ஜூன் 23-
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, கூடுதலாக பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த மனு, இந்திய மாணவர் சங்கத்தின், மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிளை சார்பாக, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வே. அர்ஜூன் தலைமையில், மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளரிடம் கொடுக்கப் பட்டது.
அந்த மனுவில், “மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தஞ்சாவூர் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்து படிக்கின்றனர். இந்த மாணவர்கள் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரிக்குச் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்துகள் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்புகளுக்கு செல்ல முடிய வில்லை. எனவே, கல்லூரி தொடங்கும், முடிவடையும் நேரத்தில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும். சில பேருந்துகளில் மாணவர்கள் பயண அட்டையை அனுமதிக்க மறுக்கும் போக்கும் உள்ளது. எனவே மாணவர்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும்” என கூறப் பட்டுள்ளது.